Sangathy
மரண அறிவித்தல்

திரு ஏரம்பு விஜயரத்தினம் (நல்லையா)

பிறப்பு19 OCT 1951, இறப்பு30 MAR 2023

வயது 71
நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) வவுனியா, Sri Lanka செட்டிக்குளம், Sri Lanka

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, செட்டிக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பு விஜயரத்தினம் அவர்கள் 30-03-2023 வியாழக்கிழமை அன்று செட்டிக்குளத்தில் காலமானார்.

அன்னார், ஏரம்பு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கதிர்காமு மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சீத்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சோபனா(வவுனியா), வினோபாஜி(வினோ- பெல்ஜியம்), விஜிதரன்(சுவிஸ்), விக்கிரமன்(அஜி- சுவிஸ்), சோபிகா(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம்(கணக்கர்), நடராசா(சின்னத்தம்பி) மற்றும் பத்மநாதன்(பழனி- இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரபாகரன், கலைச்செல்வி, சோபனா ஆகியோரின் அன்பு மாமாவும்,

நியூரா, பிதுஷன், அஸ்விகா, ஆதிரன், சினித்திக் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

சின்னா, தனலட்சுமி, பத்மாவதி, காலஞ்சென்றவர்களான பாக்கியம், தர்மலிங்கம், பார்வதி மற்றும் சவுந்தலை, தியாகராசா, சரஸ்வதி, காலஞ்சென்ற கோமளம், சிவரூபி, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல. 143,
2ம் பண்ணை,
செட்டிக்குளம்,
வவுனியா.

தகவல்: குடும்பத்தினர்

Related posts

திரு கந்தையா செல்வராஜா

John David

அமரர் முத்துலிங்கம் செளபாக்கியவதி

Lincoln

Mrs Annaluxmy Mahadeva

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy