மண்ணில்16 MAR 1939, விண்ணில்09 APR 2020
வயது 81
அனலைதீவு 7ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) செட்டிக்குளம், Sri Lanka வவுனிக்குளம், Sri Lanka தமிழ்நாடு, India
யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளம், வவுனிக்குளம், இந்தியா குன்றத்தூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் பேரின்பநாயகி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:07/04/2023.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் மனம் வாடித் தவிக்கும்
அன்பு அம்மா, கணவர், பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள் மற்றும்
உற்றார், உறவினர்கள்.