Sangathy
News

பலபிட்டியவில் துப்பாக்கிச்சூடு ; பிரதி அதிபர் காயம்

பலபிட்டிய நீதிமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் இன்று(26) காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பிரதி அதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 பேர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அம்பலாங்கொடையில் பாடசாலை ஒன்றில் பிரதி அதிபராக கடமையாற்றியவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

44 வயதுடைய அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

North Korean leader Kim Jong-Un’s sister says summit with Donald Trump unlikely

Lincoln

அடுத்த மாதம் முதல் எரிபொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – D.V.சானக

Lincoln

களனி பல்கலைக்கழகத்தின் 4 மாணவர்களுக்கு வகுப்புத் தடை

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy