Sangathy
News

உலக வங்கியின் அனுசரணையில் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை

Colombo (News 1st) ஆதார வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆதார வைத்தியசாலைகளில் தற்போதும் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் அடிப்படை சுகாதார சேவைகள் பிரிவின் உலக வங்கியின் செயற்றிட்ட பணிப்பாளர், வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியை நிவர்த்திப்பதற்காக சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய உலக வங்கியின் ஒதுக்கீட்டின் கீழ் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாட்டின் மருந்து தேவையில் 30 வீதத்தை இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் மருந்து தேவையில் 17 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க கூறியுள்ளார். இதனால் பல கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் புதிதாக மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 2 வருடங்களில் நாட்டின் மருந்துகளுக்கான தேவையில் 70 வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டினார். நீரிழிவு, இருதய நோய் போன்றவற்றிற்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக டொக்டர் சமன் ரத்நாயக்க கூறினார்.

Lincoln

UK Parliament to discuss HR violations in SL

Lincoln

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் இன்று(19) ஆரம்பம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy