Sangathy News

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், ​மேலதிக வகுப்புகளுக்கு 11ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை

 

Colombo (News 1st) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், ​மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தடையை மீறி செயற்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 2888 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

Exit mobile version