Sangathy News

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க கப்பல்

Colombo (News 1st) அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

Brunswick எனப்படும் இந்த கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்குமென கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலில் 24 பேர் வருகை தந்துள்ளதுடன், அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version