Site icon Sangathy News

வடிவேல் சுரேஷ்க்கு மீண்டும் ஒரு பதவி!

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளின் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அரசு செயல்படுத்தும் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் மேற்பார்வையிட அவர் நியமிக்கப்படுவார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கான நியமனத்தை வழங்கியுள்ளார். அண்மையில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களில் ஒருவராக வடிவேல் சுரேஷ் எம்.பி. நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version