Site icon Sangathy News

பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலையான தனுஷ்கவுக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு விளையாட்டுக் கழகமான SSC விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது

அதன்படி, இன்று (23) ஆரம்பமாகவுள்ள “இன்டர் கிளப்“ ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க குணதிலக்க இணைந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட தனுஷ்க குணதிலகவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Exit mobile version