Site icon Sangathy News

தடம்புரண்ட ரயில் தண்டவாளங்களை விரைவாக புனரமைக்க விசேட குழு

Colombo (News 1st) ரயில்கள் தடம்புரளும் சந்தர்ப்பங்களில், தண்டவாளங்களை விரைவாக புனரமைப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் நலன் கருதி இந்த வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே ஊடகப் பேச்சாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் மண்சரிவு காரணமாக மலையக ரயில் மார்க்கத்தில் ரயில்கள் பல தடம்புரண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version