Site icon Sangathy News

புதிய கொரோனா குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஜே.என் 1 ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு எனப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் 19 வைத்தியசாலைகளில் இது தொடர்பான மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜே.என். 1 ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு உலகின் 41 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version