Site icon Sangathy News

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் நீல் இத்தவல நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக செத்திய குணசேகர மற்றும் கே.பேர்னட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட பொருத்தமான நியமனங்கள் 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version