Site icon Sangathy News

60 வகையான மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு – சுகாதார அமைச்சு

Colombo (News 1st) இலங்கையின் மருத்துவக் கட்டமைப்பில் 60 வகையான மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

பற்றாக்குறையாகவுள்ள சகல வகையான மருந்துகளும் தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மருந்து விநியோகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

அந்த மருந்துகள் சில வாரங்களுக்குள் கட்டம் கட்டமாக நாட்டிற்கு கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து தற்போது அதிகளவு மருந்துகள் கொள்வனவு செய்யப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version