Sangathy News

நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாக அதிகாரியின் தாயார் இறைபதமடைந்தார்

Colombo (News 1st) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரியின் தாய் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று(28) சிவபதமடைந்தார்.

சுகிர்தாதேவி குமாரதாஸ் அம்மையார், நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி, அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் மனைவியாவார்.

இறுதிக்கிரியை யாழ்.நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

அன்னாரின் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version