Site icon Sangathy News

சர்வதேச பெட்மிண்டன் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் சாய் பிரனீத்..!

இந்திய முன்னணி பெட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று(04) அறிவித்தார். 31 வயதான சாய் பிரனீத் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளதுடன் 2019ஆம் ஆண்டில் உலக பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று சாதனை படைத்திருந்தார்.

தனது விளையாட்டு வாழ்க்கையில் புதிய இன்னிங்ஸை தொடங்க இருக்கும் சாய் பிரனீத், அமெரிக்காவில் உள்ள டிரையாங்கிள் பெட்மிண்டன் அகடமியின் தலைமை பயிற்சியாளராக அடுத்த மாதத்தில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version