Sangathy News

இலங்கை கடலில் மீன் பிடித்த 15 இந்திய மீனவர்கள் கைது

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

படகுடன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறை மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version