Site icon Sangathy News

அதிக வருமானம் ஈட்டுவோருக்கே உத்தேச வாடகை வரி : ஜனாதிபதி..!

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் என்றும், சாதாரண வருமானம் ஈட்டுபவர்களுக்கு அன்றி, அதிக வருமானம் ஈட்டுவோருக்கே இந்த வரி விதிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால், அது குறித்து, ஆராய பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version