Site icon Sangathy News

வங்கி முன்பாக இனந்தெரியாத சடலம் மீட்பு..!

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தவத்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவின் அடிப்படையில் நேற்று (23) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 5 அடி 4 அங்குல உயரம் கொண்ட மெலிந்த நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Exit mobile version