Site icon Sangathy News

கண்டி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : இராணுவத்தினர் களத்தில்..!

கண்டி நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குள் வெடிகுண்டு காணப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டி நீதிமன்றத்தின் வழக்கு நடவடிக்கைகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்திற்கு வருகை தந்த மக்களை பாதுகாப்புக்காக வெளியேற்றியுள்ளனர்.

வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவு, இராணுவம் மற்றும் பொலிஸார் சோதனை கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version