Site icon Sangathy News

பழுதான உணவால் பரிதாபமாக உயிரிழந்த மாணவர்கள் : ஆந்திராவில் சோகம்..!

பழுதான பிரியாணி மற்றும் சமோசாவை சாப்பிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம், அனகாபள்ளி மாவட்டம் கொடவரோட்லா மண்டல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதியில் வழங்கப்பட்ட பிரியாணி மற்றும் சமோசாவை சாப்பிட்ட சுமார் 30 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சைப் பலனின்றி மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Exit mobile version