Site icon Sangathy News

பாகிஸ்தானில் 23 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்..!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் முசகேல் மாவட்டத்தில் 23 பயணிகளை வழிமறித்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

இன்று (26) முசகேல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் மற்றும் டிரக் ஒன்றை பயங்கரவாதிகள் வழிமறித்தனர்.

இரண்டு வாகனங்களில் இருந்து மக்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று 23 பேரை சுட்டு படுகொலை செய்துள்ளனர்.

இச்சம்பவத்தை அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடங்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version