Site icon Sangathy News

குஷி 2 திரைப்படத்தை குறித்து மனம் திறந்த எஸ்.ஜே சூர்யா..!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.

இப்படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தின் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் சூழ்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த நேர்காணலில் எஸ்.ஜே சூர்யா சுவாரசியமான தகவலை கூறினார். அதில் அவர் தான் குஷி 2 படத்தின் கதையை பவன் கல்யாண் சாரிடம் கூறினேன், அவருக்கு கதை மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் இப்பொழுது காதல் கதை செய்ய விருப்பமில்லை என கூறினார். அந்த கதையை எனக்கு எடுக்க ஆசை இருக்கிறது. அதற்கு நானி, விஜய் சார் , ராம் சரண் என அனைவரும் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பர் என கூறினார்.

மேலும் அந்த படத்திற்கு கதாநாயகி கதாப்பாத்திரத்திற்கு பிரியங்கா மோகன் சரியாக இருப்பார் என கூறினார்.

Exit mobile version