Site icon Sangathy News

இலங்கையிடம் பிரிட்டன் விடுத்துள்ள வேண்டுகோள்!

மனித உரிமை பேரவையுடன் இலங்கை மீண்டும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெனீவாவில் மனித உரிமை பேரவையின் நேற்றைய அமர்வில் பிரிட்டனின் பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிவில் சமூகம் துன்புறுத்தப்படுவது கண்காணிக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் சமூகங்களிற்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கும் நிலத்தகராறு குறித்து சுட்டிக்காட்டபட்டுள்ளது.

மேலும் இந்த நிலத்தகராறு குறித்து தீர்வை காண வேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Exit mobile version