Site icon Sangathy News

கண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 16 சீனப் பிரஜைகள் கைது!

கண்டி – அணிவத்த பகுதியில் உள்ள உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 16 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், பல்லேகலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த சீன பிரஜைகள் உட்பட 130 வெளிநாட்டுப் பிரஜைகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்

அத்துடன், ராஜகிரிய – வெலிக்கடை பகுதியில், இணையத்தள நிதி மோசடியில் ஈடுபட்ட 15 சீன பிரஜைகள் நேற்று கைதானமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version