Site icon Sangathy News

இஸ்ரேலுக்கு நவீன ஏவுகணை தடுப்பு சாதனங்களை வழங்கும் அமெரிக்கா!

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து கூட்டணி நாடான இஸ்ரேலைப் பாதுகாக்க உதவியாக, அதிக உயரத்தில் ஏவுகணைகளை அழிக்கும் திறன் பெற்ற நவீன சாதனம் ஒன்றை அமெரிக்கா வழங்கவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில், பாதுகாப்புத் துறை மந்திரி லாய்ட் ஆஸ்டின் இதனைத் தெரிவித்தார்.

இதே போன்று, இஸ்ரேல் வான் பாதுகாப்பை ஊக்குவிக்க உதவியாக அமெரிக்க இராணுவ அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version