Site icon Sangathy News

காசாவில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் – 22 பேர் பலி!

காசாவின் மத்தியப் பகுதியில் உள்ள நுசிராட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், அந்த தாக்குதலில் 80 பேர் வரை காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை ஒன்றின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள இராணுவத்தளத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 7பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version