Site icon Sangathy News

தென்கொரியாவுக்கு குப்பை பலூன்களை அனுப்பிய வடகொரியா..!

தென்கொரியாவுக்கு நேற்று குப்பை நிரப்பிய பலூன்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவின் இந்த குப்பை பலூன்கள், தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் விழுந்துள்ளது.

உடனடியாக அந்த பலூன்களை பாதுகாப்புக்கு இருந்த ஊழியர்கள் கைப்பற்றினர்.

இந்த பலூன்களுக்குள் ஆபத்தான எதுவும் இல்லை எனவும் தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version