Site icon Sangathy News

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 24 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது மேலும் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகளுக்காக வைத்தியாசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஏனைய நாட்களை விட இன்று ரயில் நிலையத்தில் குறைவான பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version