Site icon Sangathy News

மல்வத்து ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்

மல்வத்து ஓயா குளத்தை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அநுராதபுரம், வவுனியா, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மல்வத்து ஓயா குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பால் அனுராதபுரம் மாவட்டத்தில் மஹாவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவு, வவுனியா மாவட்டத்தின் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான், மூசாலை, மடு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும், வெள்ளத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அப்பகுதி மக்களிடம் நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Exit mobile version