Site icon Sangathy News

ரொறன்ரோவில் கடும் குளிர் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இந்த வார இறுதியில் கனடாவின் ரொறன்ரோவில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஆர்க்டிக் காற்று வீசுவதால் கடுமையான குளிர் நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை பிற்பகலில், பகல்நேர வெப்பநிலை அதிகபட்சம் -4 C ஆகக் குறையும், இது மறை 10 பாகை செல்சியஸ் அளவில் உணரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரப்பதனின் அளவு அதகிரிப்பதனால் ஞாயிறன்று மறை 20 பாகை செல்சியஸ் வெப்பநிலையை உணர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்க்டிக் காற்றின் ஊடுருவல் அடுத்த வியாழக்கிழமை வரை நீக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version