Site icon Sangathy News

குஷ் ரக போதைப்பொருளுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

தாய்லாந்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் இலங்கை இராணுவத்தின் சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

Exit mobile version