Site icon Sangathy News

கொங்கோவில் மர்ம நோய் – 53 பேர் பலி

மத்திய ஆபிரிக்காவின் கொங்கோவில் பரவி வரும் மர்ம நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நோய்த் தொற்று காரணமாக 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் 48 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வௌவால் கறியினை உட்கொண்ட 3 சிறுவர்களிடமே இந்த நோய் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version