சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு தென்னாப்பிரிக்க அணி முன்னேறியுள்ளது.
இதன்படி இந்தியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
இந்தநிலையில் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளதுடன், இரண்டாவது அரையிறுதிப் போட்டி மார்ச் 5 ஆம் திகதி லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

