Site icon Sangathy News

நுளம்புகளை பிடித்துக் கொடுத்தால் சன்மானம்!

பிலிப்பைன்ஸில் நுளம்புகளை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவிவரும் நிலையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதயில் மாத்திரம் பிலிப்பைன்ஸில் 28,000ற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் நுளம்புகளை உயிருடனோ அல்லது கொன்றோ கொண்டு வந்தால் 5 நுளம்புகளுக்கு அந்நாட்டு மதிப்பில் ரூ. 1.50 வீதம் சன்மானம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version