Site icon Sangathy News

வெள்ளை முடியை கறுப்பாக்க மருதாணி வேண்டாம்…இந்த பொருள் இருந்தா போதும் | Home Beauty Tips Natural Black Color On White Hair

தற்போது முடி நரைக்கும் பிரச்சனை எல்லோருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. அதிலும் இளம் வயதிலேயே முடி நரைப்பது பெரும் பிரச்சனை.

முடி நரைப்பது பெரும் பிரச்சனை அல்ல. அதை நாம் கையாள்வது தான் பெரும் பிரச்சனை. இது வருவதற்கு காரணம் மாறிவரும் வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் ரசாயனப் பொருட்களின் பயன்பாடு போன்ற காரணங்கள் தான்.

இதை சரி செய்ய கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தவது உடல் நலத்திற்கு கேடு. ஆனால் சிலர் இந்த வெள்ளை முடியை மறைக்க மருதாணி அல்லது முடி சாயத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்த டிப்ஸ் நீண்ட காலத்திற்கு இருக்காது. இதனால் முடி வேகமாக நரைக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பதிவில் வேறு எந்த பொருட்களை கொண்டு முடியை கருப்பாக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளை முடி கருப்பாக வீட்டு வைத்தியம்
நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் நெல்லிக்காய் கூந்தலுக்கு ஒரு சிறந்த இயற்கையான முடி டானிக் ஆகும். இதன் காரணமாக இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி நரைப்பதைத் தடுக்கின்றன.

எனவே 3-4 நெல்லிக்காயை நறுக்கி, தேங்காய் எண்ணெயில் எண்ணெய் கருமையாகும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் இதை கொஞ்சம் அப்படியே ஆற வைக்கவும்.

இந்த கலவையை ஒவ்வொரு இரவும் பூசி தலைமுடியை மசாஜ் செய்யவும். இது முடி வேர்களை வலுப்படுத்தி மற்றும் படிப்படியாக நரைத்தலை குறைக்கும்.

கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை இயற்கையாகவே முடியை கருப்பாக்க உதவும் என்பது பலருக்கும் தெரியும். இதில் உள்ள சேர்மங்கள் முடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாற்றும்.

எனவே தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும். அது குளிர்ந்த பின்னர் இந்த எண்ணெயைக் கொண்டு தலையை மசாஜ் செய்யவும். இது புதிய வெள்ளை முடியின் வளர்ச்சியைக் குறைத்து முடியின் இயற்கையான நிறத்தைப் பராமரிக்கும்.

தேன் மற்றும் கருப்பு தேநீர் கழுவுதல் கருப்பு தேநீர் கூந்தலுக்கு இயற்கையான நிறத்தை அளிக்க உதவுகிறது மற்றும் நரைப்பதைக் குறைக்கிறது. 2-3 தேநீர் பைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிடவும்.

அதில் சிறிது தேன் கலந்து தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்வதன் மூலம், முடி நிறம் படிப்படியாக கருப்பாக மாறத் தொடங்கும்.

மருதாணி மற்றும் செயற்கை சாயத்தை தவிர்த்து இதுபோன்ற பொருட்களை நரைமுடியை கருப்பாக்க பயன்படுத்தினால் ஆரோக்கியத்துடன் நல்ல பெறுபேற்றை பெறலாம்.

Exit mobile version