Site icon Sangathy News

உலக வங்கி தலைவர்களை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்காவுக்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது முதலீடு, டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் பிராந்திய அபிவிருத்தியை மையமாகக் கொண்ட மூன்று வருடங்களுக்கான கூட்டாண்மை குறித்து உலக வங்கித் தலைவர் அஜய் பங்காவுடன் விரிவாக கலந்துரையாடியதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Exit mobile version