Site icon Sangathy News

நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் : 9 பேர் பலி..!

In this photo provided by the Ukrainian Emergency Service, rescuers recover the bodies of passengers after a Russian drone struck a passenger bus at the village of Bilopillya in the Sumy region, Ukraine, Saturday, May 17, 2025. (Ukrainian Emergency Service via AP)

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்தன. ஆனால் ரஷியா மற்றும் உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்தன.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார். 30 நாட்கள் போர் நிறத்த பரிந்துரையை தயார் செய்தது. அதன்பின் ரஷியாவுடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் உக்ரைனுடன் மேற்கத்திய நாடுகளான பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

முதலில் இரு நாடுகளும் 30 நாட்கள் போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியானது. பின்னர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில்தான் நேற்று ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வரும் நிலையில் முதன்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை 2 மணி நேரம் கூட நீடிக்கவில்லை.

இந்த நிலையில் ரஷியா உக்ரைனின் வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில, 4 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷியா எல்லையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுமியின் பிலோபிலியா நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பாடத்தை வெளியிட்டு சுமி நிர்வாகம், பொதுமக்கள் வாகனம் மீது வேண்டுமென்று ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது மற்றொரு போர் குற்றம் எனச் சாடியுள்ளது.

உக்ரைன்- ரஷியா இடையிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இரு தரப்பிலும் மிகப்பெரிய அளவில் கைதிகள் பரிமாற்றத்திற்கு சம்மதம் தெரிவிதுள்ளதாக தெரிகிறது.

அதேவேளையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்ச்சை நடத்த வேண்டும் என உக்ரைன் விரும்புவதாக தெரிகிறது. அதேவேளையில் ரஷியா இருதரப்பிலும் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் தலைவர்கள் சந்திப்பு பரிசீலனையில்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version