Site icon Sangathy News

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது…!

கொழும்பு – கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 13ஐச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று புதுக்கடை 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Exit mobile version