Site icon Sangathy News

அவசர சேவை வரியை எதிர்த்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

இன்று மாநில பட்ஜெட் வெளியிடப்படுவதற்கு முன்னதாக, மெல்பேர்ணின் CBD-யில் நடைபெறும் போராட்டத்தில் பல தீயணைப்பு வாகனங்கள் பங்கேற்கின்றன.

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட அவசர சேவை வரிக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் இணைந்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள், விவசாயிகள் மற்றும் தீயணைப்பு ஆணையத்தின் (CFA) தன்னார்வலர்கள் மாநில நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

வரிகள் அறிமுகப்படுத்தப்படுவதால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டாலர்கள் கூடுதலாகச் செலவாகும் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கனவே பொருளாதார ரீதியாக சிரமப்படும் விவசாயிகளுக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கூடுதல் வரியை ஈடுகட்ட விவசாயிகள் பயிர்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், விக்டோரியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்றும் விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.

கிராமப்புற தீயணைப்பு தன்னார்வலர்களுக்கு ஆதரவளிக்க விவசாயிகளும் போராட்டத்திற்கு வந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பேரணியில் 2000 முதல் 3000 பேர் வரை பங்கேற்றுள்ளனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Exit mobile version