Site icon Sangathy News

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சரும் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் மே 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (24) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கல்கிஸ்ஸ பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று (23) கைது செய்யப்பட்டிருந்தார்.

Exit mobile version