கொட்டாஞ்சேனையில் உள்ள புளூமெண்டல் ரயில் வீதிக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று சந்தேக நபர்களும் ஒரு சொகுசு கார் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஐஸ் ஆகியவற்றை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

