Site icon Sangathy News

பிசிசிஐ-ன் இடைக்காலத் தலைவராகிறார் ராஜீவ் சுக்லா

பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி 2022 அக்டோபர் முதல் இருந்து வருகிறார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் 1983 உலகக் கோப்பை வென்றவருமான இவர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து 36-வது தலைவராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் 70 வயது உச்ச வரம்பை எட்ட உள்ளதால், பிசிசிஐ-யின் தலைவர் பதவியில் இருந்து ரோஜர் பின்னி விலகவிருப்பதாகவும், பிசிசிஐயின் தற்போதைய துணைத் தலைவரான ராஜீவ் சுக்லா ஜூலை மாதத்தில் இருந்து இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

செப்டம்பரில் புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version