Site icon Sangathy News

காசாவில் இஸ்ரேல் துப்பாக்கி பிரயோகம் : 27 பேர் பலி..!

தெற்கு காசாவின், ரஃபா நகரில் உதவிகளுக்காகக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில், 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் 90 பேர் காயமடைந்துள்ளதாகவும், காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பல சந்தேகநபர்களை அடையாளம் கண்டதன் பின்னர் உதவி வழங்கப்படும் வளாகத்துக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக, இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன், உயிரிழப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

 

Exit mobile version