Site icon Sangathy News

பண மோசடியில் ஈடுபட்ட சீனப் பெண் கைது

பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் சீனப் பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா பெற்றுக்கொடுப்பதாக கூறி 15 இலட்சம் ரூபா மோசடி மற்றும் அமெரிக்க டொலர் வழங்குவதாகக் கூறி 191,600 ரூபா பண மோசடி செய்ததாக குறித்த பெண் மீது பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

அதன்படி, விசாரணையை நடத்திய கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சீனப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

54 வயதான சீனப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version