Site icon Sangathy News

12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், காங்கோ, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹெயிட்டி, ஈரான், லிப்யா, சோமாலியா, சுடான், யெமன் ஆகிய நாடுகளிலிருந்து வரும் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முழுத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது X கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், “எங்களுக்கு தீங்கு செய்ய விரும்பும் நபர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்.

அமெரிக்காவை ‘ஆபத்தானவர்களிடமிருந்து’ பாதுகாக்க அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தொடர்புடைய பட்டியல் திருத்தப்படலாம் என்றும், பட்டியலில் மேலும் பல நாடுகள் சேர்க்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைகள் ஜூன் 9, 2025 முதல் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் அந்த திகதிக்கு முன் வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்படாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் ஏழு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு தடை விதிப்பதாகவும் அறிவித்தார், மேலும் டிரம்பிற்குப் பிறகு பதவியேற்ற முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் 2021 இல் தடையை நீக்கினார்.

கொலொராடோவில் நடந்த அண்மை தாக்குதலால் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டிருயிருந்ததாக டிரம்ப் கூறினார்

Exit mobile version