Site icon Sangathy News

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை வெண்கலம் வென்றார்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

10 மீ ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் 252.7 புள்ளிகள் பெற்று சீன வீராங்கனை வாங் ஜிஃபை தங்க பதக்கமும் கொரியாவின் குவான் யூன்ஜி 252.6 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கமும் வென்றனர். 231.2 புள்ளிகள் பெற்று இளவேனில் வாலறிவன் வெண்கலம் வென்றார்.

 

Exit mobile version