Site icon Sangathy News

மின் கட்டணம் அதிகரித்த போதிலும் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது : அனுர கருணாதிலக்க

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நீர்க்கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த அவர், மின்சாரக் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டார்.

செலவுகளை நிர்வகிப்பதுடன், தற்போதைய கட்டணத்திற்கமைய நீரை விநியோகிக்க முடியுமெனவும் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.

இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கமைய, மின்சாரக் கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டு இன்று முதல் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version