Site icon Sangathy News

சீனாவை ஆட்டிப்படைக்கும் சூறாவளி

சீனாவின் தெற்குக் கரையை வூடிப்ச் சூறாவளி ஆட்டிப்படைத்துள்ளது.

ஆயிரக்கணக்கானோர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சுமார் 16,000 பேர் கட்டுமானத் தளங்களிலிருந்தும் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளது.

பல விமான, ரயில் சேவைகள் இரத்துசெய்யப்பட்டுள்ளன. நேற்று இரவிலிருந்து அந்த வட்டாரத்தில் கடும் காற்று வீசுகிறது. கனமழை பொழிகிறது.

கப்பல்களில் வேலை செய்யும் சுமார் 40ஆயிரம் பேர் கரை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு சீனாவைத் தாக்கியுள்ள முதல் சூறாவளி இதுவாகும்.

Exit mobile version