Site icon Sangathy News

36 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்ய பரிசீலனை செய்யும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், கூடுதலாக 36 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில், குடியரசுக் கட்சித் தலைவர் 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார்,

அமெரிக்காவை “வெளிநாட்டு பயங்கரவாதிகள்” மற்றும் பிற தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை தேவை என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்தே மேற்படி கூடுதல் நாடுகளையும் தடை செய்ய திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது.

Exit mobile version