Site icon Sangathy News

ENG vs IND முதல் நாள் டெஸ்ட் ஆட்டம் குறித்த பதிவுக்கு கங்குலி ரிப்ளை வைரல்

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா 359/3 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101), ஷுப்மான் கில் (127) சதம் அடித்தனர். ரிஷப் பந்த் 65 ரன்கள் எடுத்தார்.

இந்த அதிரடி ஆட்டத்தை முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி பாராட்டினர்.

2002ல் ஹெடிங்லியில் இங்கிலாந்துக்கு எதிராக தாங்கள் விளையாடிய சிறப்பான ஆட்டத்தை இருவரும் எக்ஸ் சமூக வலைதளத்தில் நினைவு கூர்ந்தனர்.

சச்சின் 193 ரன்களும், கங்குலி 128 ரன்களும் எடுத்த அந்தப் போட்டியில், ராகுல் டிராவிட் 148 ரன்கள் எடுத்திருந்தார்.

கங்குலி, “இந்த முறை இந்திய அணியில் 4 சதம் அடிக்க வாய்ப்புள்ளது, பந்த் மற்றும் கருண் ஆகியோர் சிறப்பாக விளையாடலாம், 2002 இல் முதல் நாள் களம் இதை விட சுட்டறு வித்தியாசமாக இருந்தது” என்றும் கருத்து தெரிவித்தார். இந்த பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

 

Exit mobile version