Site icon Sangathy News

3 கோடி ரூபாய் பெறுமதியுடைய இரு சொகுசு வாகனங்கள் பறிமுதல்

களுத்துறை – பண்டாரகம பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியுடைய, 2 சொகுசு வாகனங்களை பாணந்துறை வலான மோசடி தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வாகனங்களில், மிட்சுபிஷி மொன்டெரோ (Mitsubishi Montero) ஜீப் ரக வாகனமொன்றும், சொகுசு கெரவன் (Caravan) வேன் ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்கள், நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதை உறுதி செய்யும் ஆவணங்கள் இல்லாத நிலையில், அவை கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version